Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாவட்ட அளவிலான (FENCING) வாள் சண்டை போட்டி 

நவம்பர் 25, 2023 11:53

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக
மாவட்ட அளவிலான வாள் சண்டை ( FENCING) போட்டி காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 17 .11 .2023 மற்றும் 18 .11 .2023 ஆகிய இரு நாட்கள்  நடைபெற்றது.

இப்போட்டியில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து அரசு / அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் அரசு மேல்நிலைப்பள்ளி அணியாபுரம் பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

இதில் மாணவர்கள் பிரிவில் (Gold) முருகானந்தம், ராகுல், லோகேஷ் குமார் ஆகியோர் மூன்று மாணவர்கள் முதலிடமும், பெரியசாமி, விஸ்வநாதன், கபிலன் ஆகிய மூன்று மாணவர்கள் (Silver) இரண்டாம் இடமும், யஸ்வந்த், அபிஷேக் ஆகிய இரண்டு மாணவர்கள் (Bronze) மூன்றாம் இடமும், மாணவிகள் பிரிவில் ரூபா ஸ்ரீ  ஜெயஸ்ரீ ஆகிய இரண்டு மாணவிகள் (silver) இரண்டாம் இடமும், வருணிகா, அனுஷ்கா, அக்ஷயா, ஆனந்தீஸ்வரி/ ஹேமலதா, லாவண்யா, லிசா, ஸ்ரீ கனிஷ்கா, சாருமதி, தேஜஸ்வினி ஆகிய பத்து மாணவிகள் (bronze) மூன்றாமிடமும் பெற்று வருகிற ஜனவரி மாதத்தில்  பெரம்பலூரில் நடைபெறக்கூடிய மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். 

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், இவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ம.பெரியசாமியையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.பழனிசாமி மற்றும் இருபால் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்தினார்.

தலைப்புச்செய்திகள்